×

பேருந்து மோதி டிரைவர் பரிதாப பலி

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகர் பால விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜ்(57), தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் அரக்கோணம் சாலையில் புது பைபாஸ் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது காஞ்சிபுரத்திலிருந்து ஆந்திர மாநிலம் திருமலை நோக்கி வேகமாக சென்ற ஆந்திரா ஆர்டிசி பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்ட எத்திராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேருந்து மோதி டிரைவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Ethiraj ,Thiruthani Periyar Nagar Bala Vinayakar Koil Street, Thiruvallur District ,Arakkonam road ,Kanchipuram, Andhra ,Dinakaran ,
× RELATED மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது